சென்னை, ஏப்.14 மோடி தலைமையிலான அரசில் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி தொடர்பாக திருக் குறளை குறிப்பிட்டு ப.சிதம் பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப் பதாவது:-
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 7ஆவது ஆண்டினை நிறைவு செய்ய உள்ள நிலை யில், பணவீக்கம் உயர்வு, தொழில்துறையின் உற்பத்தி வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பங்குச் சந்தை யில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நசுக்கும் வரிகளைச் சேர்த்தல், அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் அதிகமான மக்கள் வறுமை மற்றும் கடன் சுமைக்கு தள்ளப்பட்டிருக் கிறார்கள். இது 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்து தொடங்கிய 5 வருட கால தவறுதலான நிர்வாகத் தின் விளைவு ஆகும்.
அப்போதில் இருந்து, ஒவ் வொரு அடியும் தவறானது, அதன் கொள்கைகள் மற்றும் முடிவுகள் நம்பிக்கையற்ற முறையில் தவறானவை என் பதை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மோடியின் தவறு என்னவென்றால், அவர் விமர் சனங்களை பொறுத்துக் கொள்ள மாட்டார் அல்லது பொருளாதார வல்லுநர் களின் நல்ல ஆலோசனையை கவனிக்க மாட்டார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
என்ற 448ஆவது குறளை நினைவு கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
No comments:
Post a Comment