அகர்தலா,ஏப். 12 திரிபுரா மாநி லத்தில், ஆளுங்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அம்மா நிலத்தில் நடைபெற்ற பழங்குடியினர் கவுன்சில் எனப்படும் உள் ளாட்சி நிர்வாகத்திற்கான தேர்த லில் படுதோல்வியடைந்துள்ளது.
பாஜக அருவெறுக்கத்தக்க அர சியல் நடவடிக்கைகளை மேற் கொண்டு, ஆட்சியில் பங்குபெற்ற வடகிழக்கு மாநிலங்களில் திரி புராவும் ஒன்று.
இந்நிலையில், அம்மாநிலத்தில் பழங்குடியினர் கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில், மொத்தம் 28 இடங்களில், புதிய கூட்டணியான பூர்வீக முற்போக்கு பிராந்தியக் கூட்டணி 18 இடங் களைக் கைப்பற்றியுள்ளது.
பாஜக இடம்பெற்ற கூட்டணிக்கு வெறும் 9 இடங்களே கிடைத் துள்ளன. சுயேட்சை வேட்பாளர், எஞ்சிய ஒரு இடத்தைக் கைப்பற்றி யுள்ளார்.
திரிபுரா முற்போக்கு கூட் டணிக்கு தலைமையேற்றவர் பிரத் யோத் மாணிக்யா டெப் பர்மன் என்பவர். திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர். கடந்த 2018ஆம் ஆண்டு, பாஜக கூட் டணிக்கு பெரிய வெற்றி கிடைத் திருந்தது. ஆனால், 3 ஆண்டுகளில் நிலைமை அப்படியே மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி களும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment