புதுடில்லி, ஏப்.6 பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆளுநர் எழுதிய கடித நகலை அளிக்கக் கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருக்கு 30 நாட்கள் பரோல் அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி உத்தரவிட்டது.
இடைக்கால மனு தள்ளுபடி
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது அரசு தரப்பு வழக்குரைஞர் சார்பில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் அலுவலகத் தில் கிடைத்த கடிதத்தில், கருணைமனு தொடர்பாக முடிவு எடுக்க எம்.டி.எம்.ஏ. அறிக்கைக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட் டிருந்தது. உடனடியாக கடிதத்தின் நகலை வழங்கக்கோரி பேரறி வாளன் தரப்பில் அரசு வழக்கு ரைஞருக்கு மின் அஞ்சல் அனுப்பப் பட்டது. கடித நகல் கிடைக்கப் பெறாததை தொடர்ந்து இடைக் க £ல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்ற உத் தரவுக்கு எதிராகவும், ஆளுநரின் கடித நகலை வழங்கக்கோரியும் பேரறிவாளனின் தாயார் அற்பு தம்மாள் சார்பில் உச்சநீதிமன்றத் தின் மேல்முறையீடு செய்யப்பட் டது. இந்த மேல்முறையீடு மனு, உச்சநீதிமன்றம் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று (5.4.2021) விசா ரணைக்கு வந்தது.
தமிழக அரசுக்கு உத்தரவு
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், அம்மனுவை பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த பிரதான மனுவுடன் இணைக்கவும் உத்தர விட்டனர்.பேரறிவாளனை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும், குடியரசுத் தலை வருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்து தமிழக ஆளுநர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment