சென்னை, ஏப்.3 தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்கத்தின் தலைவர் க.லோகநாதன் விடுத்துள்ள அறிக்கையில்:-
கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளின் நிலங்களில் குடியிருப்போர் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோர் வாக்குகள் அனைத்தும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கே அளிக்கப்படும் என்றும், இச்சங்கத்தின் சார்பில் தி.மு.க. கூட்டணிக்கு அவரவர் பகுதி மற்றும் தொகுதியில் பரப்புரை செய்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தெருமுனை கூட்டம் போட்டு வாக்கு சேகரித்து தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்யுமாறு இதன் மய்ய கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment