தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்புகள்

 புதுடில்லி, ஏப்.6 நாட்டில் மராட்டியம், கருநாடகா, கேரளா, தமிழகம் மற்றும் டில்லி ஆகி யவை கடந்த 24 மணிநேரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வருகின்றன.  இந்நிலையில், நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.  நாட்டில் பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர் ஒருநாள் அதிக பட்ச கரோனா பாதிப்பு இதுவா கும். இதுவரை நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயி ரத்து 67 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மராட்டியம், கரு நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் டில்லி ஆகிய 5 மாநிலங்கள் கடந்த 24 மணிநேரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப் புகளை கொண்டுள்ளன.

மராட்டிய மாநிலம் முழுவதும் புதிதாக 47,288 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது.  இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,57,885 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் நேற்று (5.4.2021) ஒரேநாளில் மேலும் 155 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந் துள்ளனர். இதன்மூலம் கரோனா வால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,033 ஆக அதிகரித்துள்ளது.  மராட்டியத் தில் உயிரிழப்பு விகிதம் 1.83 சதவீதம் ஆகவுள்ளது.

கருநாடகத்தில் நேற்று புதிதாக 5,279 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 20 ஆயிரத்து 434 ஆக அதிகரித்து உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 3,728 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. மேலும் 32 பேர் கரோனா வுக்கு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 657 ஆக உயர்ந்து உள்ளது.

டில்லியில் நேற்று மேலும் 3,548 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,79,962 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று ஒரேநாளில் மாநிலத்தில் 15 பேர் கரோனாவால் உயிரிழந்துள் ளனர். இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,096 ஆக உயர்ந் துள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,357 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 11.37 லட் சத்தை தாண்டி உள்ளது. தமிழ கத்தில் 3,672 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இது தவிர ராஜஸ்தான் (2,429), ஆந்திர பிரதேசம் (1,326), இமாசல பிரதேசம் (567) மற்றும் உத்தரகாண்ட் (547) என அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.

இதனை தொடர்ந்து மராட் டியம், சத்தீஷ்கார் மற்றும் பஞ்சாப்பிற்கு கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்காக 50 உயர்மட்ட பொது சுகாதார குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment