இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு அதிக அளவில் இந்த நோய் ஏற்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்கலாம். அதன்படி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு எளிதில் கிடைக்கும் பல உணவுகளில் அதிக அளவில் உள்ளன. சோயா பீன்ஸ், வால்நட், மத்தி மீன், மீன் எண்ணெய், ஆளிவிதை, முட்டை, கீரை வகைகள், முளைகட்டிய தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் குறிப்பாக பச்சை புல் சாப்பிடும் விலங்குகளின் பால் போன்றவற்றில் அதிகம் உள்ளன.
புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment