ரூ.15 லட்சம் என்னாச்சு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

ரூ.15 லட்சம் என்னாச்சு?

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது 7.12.2013 சத்தீஸ்கர் மாநிலத்தில் கன்கர் என்ற இடத்தில் பேசும் போது, கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

இதுதொடர்பாக 4.2.2015 அன்று அப்போது பா... தலைவராக இருந்த அமித்ஷா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியதாவது: ‘‘அன்று மோடி கூறியது தேர்தல் வாக்குறுதி மட்டுமே, அது ஒரு ஜூம்லா (போலி வாக்குறுதி). அனைவருக்குமே இது தெரியும். ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவது என்பது இயலாத காரியம் என்று கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும்.  என்று கூறினார்.

"Promise" as a 'jumla" or election gimmick. In an interview, he said: "See, this is a jumla. 15 lakhs will not be credited in anyone's account. They (the opposition) know it, you know it and even the country knows it.''

மோடி பேசுவது எது எதெல்லாம் ஜூம்லா? எது எதெல்லாம் ஜூம்லா இல்லை என்று மோடிக்கு பதவுரை - பொழிப்புரை வழங்கும் உள்துறை அமைச்சர் விளக்கினால் நல்லது.

'பகோடா' பிரச்சினை என்றாலும் ரூ.15 லட்சம் பிரச்சினை என்றாலும் 'எங்கே சொன்னார், ஆதாரம் காட்ட முடியுமா?' என்று தொலைக்காட்சிகளில் கர்ச்சிக்கும் ஆசாமிகளுக்கு இவை ஆதாரங்கள்.

No comments:

Post a Comment