10ஆம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

10ஆம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

 சென்னை, ஏப்.7 பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை புறநகர் மின்சார சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதுஇது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை சென்ட்ரல்-- கூடூர் மார்க்கத்தில், கும்மி டிப்பூண்டி - கவரைப்பேட்டை  இடையே பராமரிப்பு ப்  பணி  நடைபெறவுள்ளதால், இன்று முதல் வருகின்ற வரும் 10ஆம் தேதி (சனிக்கிழமை) வரை புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையிலி ருந்து பகல் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல் லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரலிலிருந்து மதியம் 1.25 மற்றும் 3.15 மணிக்கு கும் மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரலி லிருந்து மதியம் 2.35 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும். வேளச்சேரியிலிருந்து மதியம் 1.55 மற்றும்  2.55 மணிக்கு கும் மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்ட்ரலிலிருந்து மாலை 4.35 மணிக்கு கும் மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும். கும் மிடிப்பூண்டியிலிருந்து மதியம் 3.40 மணிக்கு சென்ட் ரல் செல்லும் ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து இயக் கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 4.30 மணிக்கு வேளச்சேரி செல் லும் ரயில் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப் படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 5.00,  5.30 மற்றும் 6.10 மணிக்கு சென்ட் ரல் செல்லும் ரயில் பொன் னேரி ரயில் நிலையத்திலி ருந்து இயக்கப்படும்.  மேலும் கும்மிடிப்பூண்டியிலிருந்து மதியம் 3.15 மணிக்கு சென்ட் ரல் வரை செல்லும் ரயில், சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 3.10 மணிக்கு சென்ட் ரல் வரை செல்லும் ரயில்,  சூலூர்பேட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு வேளச் சேரி வரை செல்லும் ரயில் ஆகிய மூன்று ரயில்களும் முழு மையாக ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில் களுக்கு பதிலாக, கும்மிடிப் பூண்டியிலிருந்து மதியம் 1.55 மணிக்கு சென்ட்ரல் வரை ஒரு பயணியர் சிறப்பு ரயிலும், எளாவூரிலிருந்து மதியம் 2.10 மணிக்கு கடற்கரை வரை ஒரு பயணியர் சிறப்பு ரயிலும், பொன்னேரியில் இருந்து மாலை 4.20 மணிக்கு சென்ட் ரல் வரை ஒரு பயணியர் சிறப்பு  ரயிலும், வரும் 10ஆம் தேதி வரை தினசரி இயக்கப் படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment