வல்லம், மார்ச் 15 பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லுரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்க்கு தொழில்நுட்பக் கல்வியை அளிப்பதோடு இக்கல்லூரியில் சிறப் பாக செயல்பட்டு வரும் தொழிலக பயிலக இணைப்புத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வாயிலாக பல்வேறு தலைப்புகளில் பல துறைகளில் சிறந்து விளங்கும் மென்திறன் வல்லுநர்களின் உரைகளோடு வாழ்க்கை வழிகாட்டும் திட்டம் என்ற பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.
2020 -- 2021 ஆம் கல்வி ஆண்டில் ஆளுமை மேம்பாடு, புதிய தொழில் துவங்குவதற்கான விழிப்புணர்வு, உணர்வுசார் நுண்ணறிவு மற்றும் நேர் காணலில் வெற்றி பெறும் வழிமுறைகள் ஆகிய தலைப்புகளில் இணைய வழி மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் பயிற்சிகள் நடைபெற்றன.
இப் பயிற்சி வகுப்புகள் வாயிலாக இறுதி ஆண்டு மாணவர்கள் படிப்பு முடித்த பின் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது பற்றிய வல்லுநர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெறுகின் றார்கள்.
இக்கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையும் புகழ்பெற்ற தொழிற்சாலைகளும் இணைந்து நடத்திய 2020- 2021 ஆம் ஆண்டிற்கான வளாக நேர்காணலில் கலந்து கொண்ட இறுதி ஆண்டு மாணவ மாணவியர்கள் வேலை வாய்ப்புகள பெற்றனர்.
தலை சிறந்த நிறுவனங்களான சென்னை, அப்போலோ டயர்ஸ், கோயம்புத்தூர், சக்தி ஆட்டோ காம் பொணன்ட் லிமி டெட், கோயம்புத்தூர் லார்சன் அண்ட் டூப்ரோ, சென்னை, நோக்கியா சொல்யூ சன்ஸ், பாண்டிச் சேரி, லூகாஸ் டி.வி. எஸ். லிமிடெட், சென்னை, ஆக்சல் இண்டியா லிமிடெட், சென்னை, டி.வி.எஸ். டிரைனிங் சிஸ்டம்ஸ் மற்றும் சென்னை, ரிக்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங் களுடன் இணைந்து வளாக நேர்காணல் நடத்தப்பட்டது.
வளாக நேர்காணல் வாயிலாக சக்தி ஆட்டோ காம்பொணன்ட் லிமிடெட், கோயம்புத்தூர் நிறுவனத்தில் 107 மாணவர்கள் வேலைவாய்ப்புபெற்றனர்.
வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப் பாளர் தி.விஜயலெட்மி, இணை ஒருங் கிணைப்பாளர் ஆர்.அய்யநாதன், பேரா சிரியர்கள் மற்றும் மாணவர்கள இக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா பாராட்டினார்.
No comments:
Post a Comment