உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்: ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்: ஆய்வில் தகவல்


 துபாய், மார்ச் 25-  உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உத வும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய் வின் அடிப்படையில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

துபாய் பொருளாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக வங்கி வர்த்தக நட வடிக்கைகளை எளிதாக மேற் கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படை யில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல் கரோனா பாதிப்பு சூழ் நிலையை துபாய் நகரம் கையாண்டு வரும் விதமும் இதற்கு ஒரு காரணமாக திகழ்ந்து வருகிறது. துபாய் நகரம் தனது சமூக, பொரு ளாதார நிலைமைகளை மேம் படுத்த சிறப்பான பல்வேறு முடிவுகளை எடுத்து வருகி றது. இந்த திட்டங்கள் மற் றும் முடிவுகள் காரணமாக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும் இங்கு முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

துபாய் நகரம் முதலீட்டா ளர்களை மட்டுமல்லாமல் பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறது. இங்கு இருந்து வரும் சிறப் பான பாதுகாப்பு அவர்கள் தங்களது வாழ்க்கையை துபா யில் அமைத்துக் கொள்ள முக்கியக் காரணமாக இருக் கிறது. குறிப்பாக தனிநபர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், டிஜிட்டல் பாது காப்பு உள்ளிட்டவை முக்கிய மாக கருதப்படுகிறது.

துபாய் காவல்துறை பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வரு கிறது. மேலும் உள்கட்டமைப் புக்கு இங்கு அதிக முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சாலை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் சிறப் புடன் இருக்கிறது. இத்தகைய பல்வேறு காரணங்கள் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ காரணமாக இருந்து வருகி றது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment