பா.ஜ.க. வேட்பாளர்களான எச். ராஜா மற்றும் வானதி சீனிவாசன் ஆகியவர்கள் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தாதது குறித்துப் பேசியுள்ளார் மற்றொரு பாஜக வேட்பாளரான கே.டி. ராகவன்.
நாடாளுமன்ற தேர்தல்களின் போது மோடி அலை என்று சொல்லி எப்படி பாஜக பரப்புரை செய்கிறதோ, அதற்கு எதிரான மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் உள்ளது என உறுதிப்படுத்தும் நிலையே உள்ளது. ஏனென்றால் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களே மோடியின் படத்தையோ அல்லது அமித் ஷா படத்தையோ பயன்படுத்துவதில்லை. இதர கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இது சம்பந்தமாக பாஜகவைச் சேர்ந்த கே.டி. ராகவன் பரப்புரையின் போது மோடி மற்றும் அமித் ஷா படங்களைப் பயன்படுத்தாதது வருத்தமளிக்கிறது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி யுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கட்சியினர் வாக்கு சேகரிக்கச்செல்லும் போது பாஜக பெயர், அதன் கொடி மற்றும் மோடி பெயரைக் கூட உச்சரிக்க மறுக்கின்றனர். சமீபத்தில் சோழவந்தான் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக வேட்பாளர் தனது வாக்கு சேகரிக்கச்செல்லும் வண்டியில் இருந்த அத்தனை பாஜக கொடிகளையும் அகற்றக் கூறினார். இதனை அடுத்து வாக்கு சேகரிக்க வந்த பாஜகவினர் சண்டையிட்டு அதிமுக தேர்தல் அலுவலகத்தை அடித்து உடைத்தனர்.
No comments:
Post a Comment