நாகை, மார்ச் 25- இலங்கையைச் சேர்ந்த மீனவர் கள் இலங்கைக் கடற்படையினரின் உதவியோடு மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர் களை சுற்றிவளைத்து தாக்கினர். பின்னர் ஆழ் கடலில் மீன் பிடித்துதிரும்பிக்கொண்டு இருந்த மீனவர்களின் படகுகளிலிருந்த மீன்கள் உள்ளிட்ட அனைத்தையும் கொள்ளைய டித்துச் சென்றனர்.
மீனவர்கள் மீதான இந்த தாக்குதலைக் கண்ட இதர படகில் இருந்த சக மீனவர்கள் இந்திய பாது காப்புப் படையினருக்கு தகவல் அனுப்பியும் அவர்கள் நிகழ்விடத்திற்கு வரவில்லை என்று தாக்குதலை நேரில் பார்த்த மீனவர் கூறியுள்ளார். மீனவர்களைத் தாக்கியவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நவீன படகில் வந்து தமிழக மீனவர் படகை மிரட்டி நிறுத்தி பின்னர் தமிழக மீனவர் களிடமிருந்து பொருட்களைக் கொள்ளையடித் துச் சென்றனர். இந்த நிகழ்வில் சுமார் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப் புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட தாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறினர் இலங்கை கடற்கொள்ளையர்கள் கழுத்தில் கத்தி வைத்து தாக்கியதாகவும் மீனவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment