சிறு வணிகர்களுக்கான நிதி சேவை திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

சிறு வணிகர்களுக்கான நிதி சேவை திட்டம்

சென்னை, நவ. 30- இந்தியா வின் மிகப்பெரிய வணிக கட் டணம் செலுத்தும் நிறுவன மான பாரத்பே, தற்போது சென்னை நகரில் அதன் நிதி சேவைகளை வெளியிடுவதாக அறிவித்தது. இந்நிறுவனம், நாட்டில் சிறு வணிகர்களுக்கு விருப்பமான நிதிச் சேவை கூட்டாளராக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள தால் இந்த அறிவிப்பு நிறுவ னத்தின் ஆக்கிரமிப்பு விரி வாக்க உத்திக்கு ஏற்ப உள்ளது.


எவ்விதமான பரிவர்த் தனை கட்டணங்களும் இல் லாமல் யுபிஅய் அடிப்படையிலான க்யூஆர் கட்டண ஏற்றுக் கொள்ளலை இடை யேயான செயல்படுத்தும் சேவையை பாரத்பே வழங் கவுள்ளது. இது நகரத்தில் சிறு மற்றும் நடுத்தர வணி கங்களுக்கு அவர்களின் வணி கத்தை வளர்க்க உதவும் நோக்கத்துடன் கடன்களை யும் அளிக்கும். சுமார் 50+ நகரங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான வணிகர்களுடன் கூடிய வணிக வலையமைப் பைக் கொண்டுள்ள இந்நிறு வனம், தற்போதுள்ள பட்டி யலில்,சென்னையிலிருந்து 3-4 லட்சம் வணிகர்களைச் சேர்க் கும் பொருட்டுஅடுத்த 6 மாதங்களில் செயல்படவிருக் கும் தனது திட்டங்களை அறிவித்தது.


இந்நிறுவனம் ஆண்டுக்கு 7 பில்லியன் பரிவர்த்தனை களை செயலாக்கி மாதத்திற்கு சுமார் 150 கோடிக்கும் அதிக மான மதிப்புடைய கடன்களை வழங்குகிறது என இந்நிறு வன குழுத் தலைவர் சுஹைல் சமீர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment