மதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா,
வணக்கம்! பேராசிரியர் திரு.கு. குட்டிமணி அவர்களின் 'வாட்ஸ் அப்' மூலம் எனக்கு அனுப்பி வரும் 'விடுதலை'யை படித்து வருகிறேன். வாழ்வியல் சிந்தனைகள், தங்களின் அறிக்கைகள், விடுதலை தலையங்கங்கள் யாவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. சங்கிலித் தொடர்போல் 'விடுதலை'யை பரப்ப வேண்டும் என்று தொண்டர்களுக்கு தாங்கள் எழுதியக் கடிதம் படித்தேன். எனது சார்பிலும் பத்து பேருக்கு அனுப்புகிறேன். சூன் முதல் தேதி 86ஆம் ஆண்டில் வெளிவரும் 'விடுதலை'க்கும், அதன் ஆசிரியர் பெருந்தகை தங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்குவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.
அன்புடன்
சோ. முருகேசன்,
வெள்ளூர் மேற்கு, உரத்தநாடு
No comments:
Post a Comment