வவ்வாலடி (நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம்) முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் டி.ஆர். எம். கிருஷ்ணன் (வயது 92) அவர்கள் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம். இளம் வயது முதற்கொண்டே இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்த செல்வந்தர் அவர் - கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவர் - சிறை சென்றவர்.
சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் மூத்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு விருது வழங்கப்பட்டபோது நேரில் வந்து அந்த விருதினை பெற்றுக் கொண்ட அந்த நிகழ்ச்சி நம் கண் முன் நிழலாடுகிறது.
மகன் மதிவாணன், மருமகள் மதியழகி மற்றும் உற்றார், உறவினர், கழகத்தவர் அனை வருக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுயமரியாதைச் சுடரொளிக்கு வீர வணக்கம்!
- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
24.5.2020
No comments:
Post a Comment