திருப்பதி, மே 24- திருப்பதிகோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக மற்றும் காணிக்கையாக அளித்துள்ள சொத்துக்களை விற்பது என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் காணிக்கையாக, நன்கொடையாக சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு அளித்து வருவது வழக்கமான ஒன்றாகும்.
இந் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாக குழு பக்தர்கள் காணிக்கையாக அளித்து தமிழகத்தில் 23 இடங்களில் உள்ள சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.
இதனிடையே பக்தர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான இணைய தள முகவரியையும் மாற்றி உள்ளது. இதன்படி <http:/> ttdsevaonline.com என்ற முகவரி தற்போது http:/ tirupatibalaji.ap.gov.in என்று மாற்றப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment