டில்லி உயர் நீதிமன்றம் முடிவு
புதுடில்லி, மே 22, உயர்நீதிமன்றத்தின் அனைத்து அமர் வுகளும் அவசர வழக்குகள் அனைத்தையும் காணொலி மூலம் இன்று முதல் விசாரிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படவில்லை. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் சிலஅமர்வுகள் மட்டுமே அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரித்து வருகிறது. மார்ச் 24ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் 20,726 அவசர வழக்குகளை விசாரித் துள்ளன. இன்று (மே 22) முதல் டில்லி உயர்நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் அனைத்து அவசர வழக்கு களையும் விசாரிக்க உள்ளது. இதற்கான உத்தரவை டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் பிறப்பித்து உள்ளார்.
No comments:
Post a Comment