சீரிய பகுத்தறிவாளரும், கல்வியாளருமான தோழர் அரங்கசாமியின் வாழ்விணையர் ராஜம் அரங்கசாமி மறைந்தாரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

சீரிய பகுத்தறிவாளரும், கல்வியாளருமான தோழர் அரங்கசாமியின் வாழ்விணையர் ராஜம் அரங்கசாமி மறைந்தாரே!


சீரிய பகுத்தறிவாளரும், கல்வி யாளருமான தோழர் அரங்கசாமி அவர்களுடைய வாழ்விணை யரும், எங்களது உடன்பிறவா சகோதரியுமான திருமதி  ராஜம் அரங்கசாமி அவர்கள் (வயது  87)  உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (27.5.2020) இரவு 10 மணி யளவில், முகப்பேரில் உள்ள அவரது மகள் டாக்டர் மீனாம்பாள் அவர்களது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துன்பமும், துயரமும் அடைகிறோம்.


அவரது குடும்பமே நம் இயக்கக் கொள்கைக் குடும்பமாகும். அவருக்கு ஒரு மகளும் (டாக்டர் மீனாம்பாள்,  பெரியார் மருத்துவ அணியின் செயலாளர்), மூன்று மகன்களும் (பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், பொறியாளர் சாமிநாதன், ஆடிட்டர் இராமச்சந்திரன்) உள்ளனர். அவர்களுக்கும், எஞ்சிய மற்ற குடும்பத்து உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


மறைந்த திருமதி ராஜம் அம்மாள் அவர்கள் எங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே இருந்து, தேவையான பொழுதெல்லாம் கால நேரம் பார்க்காது உதவிய, எங்கள் பெரும் நன்றிக்குரியவர் என்பதை நன்றிக் கண்ணீருடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துகிறோம். அவரது மறைவு எங்கள் குடும்பத் திற்கும் பெரும் இழப்பு என்ற வேதனையுடன், அதைத் தாங்கிக் கொள்ள அவரது குருதிக் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவரது உடல் இன்று (28.5.2020) காலை 11 மணிக்கு அம்பத்தூர் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.


செய்தி அறிந்தவுடன், தொலைப்பேசிமூலம் பிள்ளைகள் அனைவரிடமும் (வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் உள்பட) இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினோம்.


திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர்   கழகம்


சென்னை 


28.5.2020


No comments:

Post a Comment