சென்னை மாவட்டம் - பெரம் பூர் வடக்குப் பகுதி 34 ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் மானமிகு ஆர்.துரைசாமி அவர்கள் (வயது 55) நேற்று (27.5.2020) தனியார் மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைகிறோம்.
கரோனா நிவாரணப் பணி களில் ‘தேனீ' போல சுறுசுறுப்புடன் தனது உடல்நலம்பற்றிக் கூட கவலைப்படாது பணியாற்றிய சீரிய பகுத்தறிவாளர் - சிறந்த கொள்கை வீரர் - தி.மு.க. - தி.க. செயல் வீரர்.
நமது தோழர்கள் கொடுங்கையூர் தே.செ.கோபால், கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி போன்றவர்களுடன் மிக நெருக்க மாகப் பழகும் அவர், நம்மிடத்திலும் மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட லட்சிய வீரர்.
அவரது மறைவால் வாடும் தி.மு.க. தலைவர், குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.5.2020
குறிப்பு: மறைவு தகவல் அறிந்ததும் சென்னை மண்டல கழகச் செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், செயலாளர் தி.செ. கணேசன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம், கொடுங்கையூர் அமைப்பாளர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, மாதவரம் பகுதி அமைப்பாளர் சி. வாசு, முத்தமிழ் நகர் பகுதி அமைப்பாளர் வி. பிரபாகரன் மற்றும் கழகத் தோழர்கள் மறைந்த ஆர். துரைசாமி குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment