ரயில்வே வாரியம் உத்தரவு
புதுடில்லி, மே 22- கரோனா ஊரடங்கு காரண மாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட தால், ரயில் நிலையங்களில் உள்ள உணவு விடுதிகள், புத்தக நிலையங்கள் மூடப் பட்டுள்ளன. தற்போது சிறப்பு ரயில்கள் இயக் கப்பட்டு வருகின்றன. மேலும் ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில் நிலையங்களில் உள்ள உணவு விடுதிகளையும், புத்தக நிலையங்களை யும் திறக்க அனுமதி அளித்து ரயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது. இதற்கு ரயில்வே மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும், உணவ கங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும், பயணிகள் உட்கார்ந்து சாப்பிட அனு மதிக்கக்கூடாது என்றும் ரயில்வே வாரியம் கண்டிப்பாக கூறியுள்ளது.
No comments:
Post a Comment