குடியாத்தம் கழகத் தோழர்கள் சார்பில் நிவாரண உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

குடியாத்தம் கழகத் தோழர்கள் சார்பில் நிவாரண உதவிகள்


குடியாத்தம், ஏப்.28  குடியாத்தம் 24.4.2020 வெள்ளிக்கிழமை மாலை. 5.00 மணியளவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங் கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடியாத்தம் பகுதியில் 60 ஏழை எளியோர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய், சேமியா, ரவை, வெங்காயம், தக்காளி அடங்கிய உணவுப் பொருள்கள் குடியாத்தம் பெரியார் அரங்கில் வழங்கப்பட்டது.  தேன்மொழி அன்பரசன், லதா சிவக்குமார் மற்றும் உஷாநந்தினி இரவிகுமார் உள்ளிட்ட கழகக் குடும்பத்தினர் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.


மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இர.அன்ப ரசன் இணையர் ரூ.6000 , மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் இணையர் ரூ.5000, குடியாத்தம் மகளிர் பாசறைச் செயலாளர் இர.உஷாநந்தினி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வ.இரவிக்குமார் இணையர் ரூ.5000, முகிலரசு ரூ.3000, ஆசிரியர் இ.வெண்மதி ரூ.2000, நகரத் தலைவர் இ. சாந்தகுமார் ரு.1000, கோ.தமிழ்செல்வி ரூ.1000, மின்சார வாரியத் தோழர்கள் சுந்தரமூர்த்தி ரூ.1000, ஏழுமலை ரூ.1000, சிவக்குமார் ரூ.1000, பாண்டியன் ரூ.500, ஆனந்தன் ரூ.500, குணாளன் ரூ.500 மற்றும் ரேவதி தினேஷ் ரூ.500, லதா ரூ 200 ஆகியோர் நிதியுதவிகளும், பாலாஜி காயத்ரி அரிசி மூட்டை ஒன்றும், மணிமேகலை அரிசி மூட்டை ஒன்றும், மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் நிதி பொருள் உதவிகளை அளித்தார்கள், கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து ரூ.30,000 மதிப்பிலான உணவு பொருள்களை வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வழங்கினார்கள்.


No comments:

Post a Comment