தாய்மார்களுக்கு சில வார்த்தைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 6, 2020

தாய்மார்களுக்கு சில வார்த்தைகள்


என் அருமைத் தாய்மார்களே! நீங்கள் பல தொந்தரவுகளுக்கும் உள்ளாகிப் பல கஷ்ட நஷ்டங்கள் பட்டு இங்கு வந்து இரண்டு நாள் தங்கிச் செல்வதற்காக ஏதாவது உருப்படியான பலன் பெற்றுச் செல்ல வேண்டாமா? எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? இது ராமேஸ்வரம் அல் லவே, பிள்ளை வரம் வாங்கிக் கொண்டு போக இந்த இடத்தில் அரசமரமும், வேப்ப மரமும் இல்லையே, சுற்றிச் சென்றால் கர்ப்பம் தரிக்குமென்று சுற்றிப் போவதற்கு! இது திருப்பதியும் அல்லவே, உள்ள காசைப் பார்ப்பானிடம் பறிகொடுத்து விட்டு மொட்டை அடித்துக்கொண்டு போக.


இது அறிவு பற்றிப் பேசும் இடம். ஆகவே, நீங்களும் ஏதாவது அறிவு பெற்றுச் செல்ல வேண்டாமா? கொஞ்சம் காது கொடுத்துக் கவனத்தோடு கேளுங் கள். தாய்மார்களே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வர்ணாசிரம தர்மப்படி, நீங்கள் சூத்திரச்சிகள், பார்ப்பன னின் தாசிகள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள் தான் தாசிகள். எந்தக் கடவுளும் சூத்திரச்சி களுடன்தான் லீலை செய்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்திகளோடு, லீலை செய்ததாகக் கூறக்காணோம். கட வுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின் கற்பைத்தான் சோதித்ததாகக் கதைகளில் கூறப்படுகிறதே ஒழிய, நம்மவரின் பெண் களைத்தான் கைப்பிடித்திழுத்துக் கற்பழித் ததாகக் கூறப்படுகிறதே ஒழிய, எந்தக் கதையிலும் பார்ப்பனப் பெண் கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படக் காணோம். அவ்வளவு இழிவு படுத்திவிட் டார்கள் இந்த அன்னக்காவடி பார்ப்பனர் கள் நம்மை. இதையறியாமல் நீங்கள் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்து காசு பணம் அழுது வருகிறீர்கள்.


இனி நீங்கள் ஒரு காசு கூட எந்தப் பார்ப்பானுக்கும் அழக்கூடாது. உங்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கோ, கெட்ட காரியங்களுக்கோ அவனை ஒரு நாளும் அழைக்கக் கூடாது. நீங்கள் கோயிலுக்குப் போகக் கூடாது. போவதாயிருந்தாலும் பார்ப்பான்தான் பூசை செய்ய வேண்டு மென்கிற கட்டுத்திட்டம் உள்ள கோயி லுக்கோ இரண்டு பெண்டாட்டிகளைக் கட் டிக்கொண்டு, அதோடு ஒரு வைப்பாட்டி யையும் வைத்திருக்கும் சாமிகளுள்ள கோயிலுக்கோ, நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. போவதானால் தடியுடன் போங்கள்.


அப்படிப் போவதானால், போகும் போது ஒரு தடி எடுத்துக் கொண்டு போங் கள், தேங்காய் வெற்றிலை பாக்குக்குப் பதிலாக! அந்தத் தடியால் அடித்துக் கேளுங் கள் அந்தச் சாமியை! நான் தடியால் அடிக்கிறேன். நீ அழாமல் இருக்கிறாயே! உனக்கு உயிர் கிடையாது, நீ வெறும் குழ விக் கல் சாமி, அதனால்தான் நான் அடிப் பது உனக்குத் தெரியவில்லை. அப்படி யிருக்க உனக்கேன் பெண்டாட்டி? அப் படித்தான் பெண்டாட்டி வேண்டுமென் றால் ஒரு பெண்டாட்டி போதாதா? இரண்டு பெண்டாட்டி ஏன் உனக்கு? இரண்டு பெண்டாட்டிகள்தான் இருந்து தொலையட்டும். ஒரு தடவை அவர்க ளைக் கலியாணம் செய்து கொண்டால் போதாதா? வருடா வருடம் ஏன் உனக்குக் கலியாணம் நடக்க வேண்டும்? அதுவும் போதாதென்று வைப்பாட்டிகள் வேறு வேண்டுமென்கிறாயே! இது நியாயமா? இத்தனையும் வேண்டுமானால் வைத்துக் கொள். அண்டங்களை எல்லாம் படைத்த உனக்கு நாங்கள் ஏன் சாமி படியளக்க வேண்டும்? உனக்கு வேண்டியதை உன்னால் தேடிக் கொள்ள முடியவில்லை. நீயா எங்களுக்குப் படியளக்கப் போகி றாய்? ஏன் சாமி மவுனம் சாதிக்கிறீர்கள்? கல் இல்லையானால், நீர் உண்மையில் கடவுள் ஆனால், நாங்கள் தரும் பொருள் உனக்குச் சேர்வதில்லையானால் உன் பேரால் எங்களைக் கொள்ளையடித்து வாழும் இந்த அன்னக்காவடிப் பார்ப் பானை ஏன் நீர் தண்டிக்கக் கூடாது? என்று தடியால் அடித்துக் கேளுங்கள். பதில் இல்லையானால் நாங்கள் கூறுவது போல் அது வெறும் குழவிக்கல் என்பதை அறிந்து கொண்டு வீடு திரும்புங்கள். பிறகு ஒரு வார்த்தை உங்களை எதிர்த்துப் பேசுவார்களா, உங்கள் கணவர்கள்?


கடவுளுக்கே இந்தக் கதியானால் அவர்கள் தம் கதி என்னவாகும் என்று அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? அப்புறம் ஒரு நாள் வெளியே போவார் களா? உங்கள் புருஷர்கள்; வேறு மங்கை யர்களைத் தேடி. அந்தச் சாமியை அடித்து வைத்தவன் நம்மவன். அந்தச் சாமிக்கு உயிர்ப் பிச்சை கொடுக்கக் கும்பாபிஷேகம் நடத்த உதவியது நம்முடைய பொருள். அந்தச் சாமிக்கு அரிசி, பருப்பு அழுது வரு வது நாம். அப்படியிருக்க நாம் அதைத் தொடக் கூடாதென்று அந்தப் பார்ப்பான் கூறுகிறானென்றால் அப்படிப்பட்ட இடத் திற்கு நாம் போகலாமா? அதற்குத் தேங் காய் பழம் படைக்கிறீர்களே, துணிமணி வாங்கித் தருகிறீர்களே? அதை அந்த குழவிக் கல்லா அனுபவிக்கிறது? குழவிக் கல்லால் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணமாகி வெளிக்குப் போகிறதா? எல் லாவற்றையும் பார்ப்பான்தானே அனுப விக்கிறான், பாடுபட்ட பணத்தை அப்படி விரயமாக்கலாமா நீங்கள்? கடவுள் என் றால் அது யோக்கியமாக, ஒழுக்கமாக பார பட்சமின்றி நடந்து கொள்ள வேண்டாமா? பாடுபடும் நீங்கள் பட்டினி கிடக்க, படிக்க வசதியின்றித் தற்குறிகளாயிருக்க, ஏழை களாக, கீழ் ஜாதி மக்களாக இருக்க, பாடு படாத பார்ப்பனத்திகள் சோம்பேறிகளாக, அய்.சி.எ. காரர்களின் மனைவிகளாக, பட் டாடை உடுத்தி மேனி மினுக்குடன் உயர் ஜாதி மக்களாக வாழ அனுமதிக்கும் கடவுளா உங்களுக்குக் கடவுள்?


- "குடிஅரசு", 5.6.1948


No comments:

Post a Comment