பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிய பா.ஜ.க. வேட்பாளர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிய பா.ஜ.க. வேட்பாளர்

featured image

கோபி, ஏப். 5- கோபிச்செட்டிப்பாளை யம் அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில், ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில், பறக்கும் படையினர் சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.
சோதனையின்போது, திருப்பூரில் இருந்துவந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ள னர்.

காரை ஓரமாக நிறுத்தாமல், சாலையின் நடுவே போக்குவரத் திற்கு இடையூறாக நிறுத்தியதோடு, சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த பா.ஜ.க. வேட்பாளரான ஏ.பி.முரு கானந்தம், கண்காணிப்பு நிலைக் குழுவைச் சேர்ந்த அலுவலர் முரு கேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு மிரட்டியுள்ளார்.
மேலும், “வாழ்நாள் முழுவதும் வழக்குப் போட்டு நீதிமன்றத்திற்கு அலைய விட்டுவிடுவேன்” என எச் சரிக்கை விடுத்ததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனராம்.

No comments:

Post a Comment