சிறுமியின் படுகொலை புதுச்சேரி நிலைகுலைந்தது - எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

சிறுமியின் படுகொலை புதுச்சேரி நிலைகுலைந்தது - எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு

featured image

புதுச்சேரி, மார்ச் 9– புதுவை முத்தியால் பேட்டை சோலை நக ரைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளாக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டார். இது தொடர் பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி படுகொலை யைக் கண்டித்தும், போதைப் பொருள் நட மாட்டத்தைக் கட்டுப்ப டுத்த வலியுறுத்தியும், இந்த நிகழ்வுக்குப் பொறுப் பேற்று முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்க் கட்சியினரால் நேற்று (8.3.2024) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற் றது.
இந்தப் போராட்டத் துக்கு திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாகவும், அதிமுக தனியாகவும் அழைப்பு விடுத்திருந்தன.

இதையொட்டி, புதுச் சேரி பெரிய மார்க்கெட், மீன் அங்காடி, நேரு வீதி, காந்தி வீதி, மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் சாலை, படேல் சாலை, திருவள் ளுவர் சாலை, மிஷன் வீதிகளில் இருந்த பெரும் பாலான கடைகள், நிறு வனங்கள் அடைக்கப் பட்டிருந்தன.
சின்ன மணிக்கூண்டு, நெல்லித்தோப்பு மார்க் கெட் கடைகளும் இயங்க வில்லை. எனினும், ஒன் றிய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின.
புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்கால் உள்ளிட்ட வெளியூர் செல் லும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு பேருந்துகள் எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

அதேபோல, டெம்போ, ஆட்டோக்களும் இயங்க வில்லை. உள்ளூர் பேருந் துகள் காவல் துறையினர் பாதுகாப்புடன் இயங் கின.
அதேநேரத்தில், பொதுத் தேர்வு நடப்ப தால், பள்ளிப் பேருந் துகள் இயங்கின. கல்லூ ரிகளும் செயல்பட்டன. சேதராப்பட்டு, மேட்டுப் பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட தொழிற் பேட்டைகளில் சில தொழிற்சாலைகளைத் தவிர பெரும்பாலானவை மூடப்பட்டிருந்தன.

திரையரங்குகளில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான பெட் ரோல் பங்க்_-களும் அடை க்கப்பட்டிருந்தன.
ஆங்காங்கே சிறுமி யின் படத்துடன் பதா கைகள் வைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி மரி யாதை செலுத்தப்பட் டது.

புதுச்சேரி நகரம் முழுக்க 500-க்கும் மேற் பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டிருந்த னர்.
சிறுமியின் வசிப்பிட மான முத்தியால் பேட்டை மணிக்கூண்டு பகுதியில் பதாகை வைத்து, அப்ப குதி மக்கள் சிறுமிக்கு இரங்கல் செலுத்தினர்.
போராட்டத்தை யொட்டி ‘இண்டியா’ கூட் டணி மற்றும் அதிமுக சார்பில் தனித்தனியே மறி யல் போராட்டங்கள் நடை பெற்றன. புதுவை வழக்குரை ஞர்கள் நீதிமன்றப் பணி களைப் புறக்கணித்தனர்.

No comments:

Post a Comment