வேலைவாய்ப்ப்பில் இளைஞர்களுக்கு பி.ஜே.பி. ஆட்சியில் கதவடைப்பு: மூடப்பட்ட கதவுகளை "இந்தியா" கூட்டணி திறக்கும் ராகுல் காந்தி உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

வேலைவாய்ப்ப்பில் இளைஞர்களுக்கு பி.ஜே.பி. ஆட்சியில் கதவடைப்பு: மூடப்பட்ட கதவுகளை "இந்தியா" கூட்டணி திறக்கும் ராகுல் காந்தி உறுதி

featured image

புதுடில்லி,மார்ச் 6- நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார்.
குறிப்பாக, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை என அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த பணியிடங்கள் அனைத் தும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிரப்பப்படும் என அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாட்டின் இளை ஞர்களே ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு வழங்குவது நரேந்திர மோடியின் நோக்கம் அல்ல.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதுடன், ஒன்றிய அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமலும் மெத் தனம் காட்டுகிறார்.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு வழங்கிய தரவுகளின்படி, 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முக்கியமான துறைகளை பொறுத்தவரை, ரயில்வேயில் 2.93 லட்சம் பணியிடங்கள், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சம், ராணுவ அமைச்சகத்தில் 2.64 லட்சம் பணியிடங்கள் காலியாகி இருக்கின்றன.
15 மிகப்பெரிய துறைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு ஒன்றிய அரசிடம் பதில் இருக்கிறதா?
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வரும் பிரதமரின் அலுவல கத்திலேயே ஏன் அதிக எண்ணிக் கையிலான மிக முக்கியமான பதவிகள் காலியாக உள்ளன?
நிரந்தர பணிகளை வழங்குவதை ஒரு சுமையாக கருதும் பா.ஜனதா அரசு தொடர்ந்து ஒப்பந்த பணி முறையை ஊக்குவித்து வருகிறது. அவற்றில் பாதுகாப்பும் இல்லை, மரியாதையும் இல்லை.

காலியான பணியிடங்களை பெறுவது நாட்டின் இளைஞர் களின் உரிமை.

இந்த பணியிடங்களை நிரப்பு வதற்கு ஒரு வலிமையான திட்டத்தை நாங்கள் உரு வாக்கி இருக்கிறோம்.
இளைஞர்களுக்கு மூடப்பட் டிருக்கும் வேலைவாய்ப்புக்கான கதவுகளை திறப்பதே இந்தியா கூட்டணியின் உறுதிப்பாடு ஆகும். இளைஞர்களின் தலைவிதி, வேலையில்லா திண்டாட்டத்தின் இருளை அகற்றி சூரிய உதயத்தை காணும்” என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment