திருவாரூர் கழகத் தோழர் பொன்.தேவநாதன் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

திருவாரூர் கழகத் தோழர் பொன்.தேவநாதன் மறைவு

featured image

திருவாரூர், பிப். 18- திராவிடர் கழக திருவாரூர் மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவரும், மேனாள் திருவாரூர் ஒன்றிய செயலாளரும், சிறு வயது முதல் இயக்க பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வருமான பொன்.தேவ நாதன் (வயது 51) தனது வேலை நிமித்தமாக கும்பகோணத்தில் தனியாக தங்கியிருந்த போது கடந்த 11.02.2024 அன்று இரவு இறந்து உள்ளார். இரு நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்ததால் 14.02.2024 புதன் அன்று நேரில் சென்ற போது இது தெரிய வந்தது. உடற்கூராய்விற் கும் பிறகு, அன்று மாலை 6.00 மணிக்கு சொந்த ஊரான திருவா ரூர் மாவட்டம், பழைய வலம் கொண்டு வரப்பட்டு மாலை 7 மணிக்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதி நிகழ்ச்சியில் கிராம மக்கள் மூடநம்பிக் கையான சடங்குகள் செய்ய முற்பட்ட போது, அவரது மகளும், கழக இளம் பேச்சாளருமான நர்மதா உறுதியாக எதிர்த்து,
தனது தந்தை உண் மையான திராவிடர் கழக தொண்டராகவே வாழ்ந்தார், எனவே அவ ரது இறுதி நிகழ்ச்சியும் கழக முறைப்படி எவ்வித மூடச் சடங்குகள் இல்லா மல் நடத்தப்பட வேண்டு மென உறுதிபட தெரிவித்தார். உடனே மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையில் கழக பொறுப்பாளர்கள் ஊர் மக்களிடம் பேசி, அவர் களை சம்மதிக்க வைத்து, எவ்வித சடங்குகள் இல் லாமல் உடலை எடுத்தது டன், அந்த ஊரில் முதல் முறையாக பெண்கள் சுடுகாட்டுக்கு வந்து, அவரது மகள் நர்மதா அவர்களே உடலுக்கு எரியூட்டினார்.

மறுநாள் கழக பொது செயலாளர் அன்புராஜ் இறந்த தேவநாதன் அவர்களது இணையர் கவிதா, மகள்கள் நந்தினி மற்றும் நர்மதா,மருமகன் சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறி னார். இந்த ஊரில் முதல் முறையாக ஒரு பெண்ணே தனது தந்தையின் உட லுக்கு எரியூட்டிய செய்தி பரபரப்பாகப் பேசப்பட் டது.

அனைத்து நிகழ்வுக ளுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உறு துணையாக இருந்து சிறப்பாக செய்து கொடுத்தார். அவருக்கு கழகத்தின் சார் பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment