குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் நடத்திய பேச்சுப்போட்டி கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 9, 2024

குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் நடத்திய பேச்சுப்போட்டி கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்பு

featured image

செண்பகராமன்புதூர், பிப். 9- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி செண்பகராமன்புதூரில் எம்.இ.டி. கல்வியல் கல்லூரியில் “பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலைநோக்காளர் பெரியார் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது.
கல்லூரி செயல் அதிகாரி கோ.மகாதேவன் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு வரவேற்புரை யாற்றினார். கழக மாவட்டத் தலை வர் மா.மு.சுப்பிரமணியம்; துணைத் தலைவர் ச. நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக குமரிமாவட்ட செயலா ளர் கோ.வெற்றிவேந்தன் தொடக் கவுரையாற்றினர். கல்லூரி முதல் வர் சிறீலதா இணைப்புரை யாற்றினார். தமிழ் பேராசிரியை பெனில் போட்டியினை ஒருங்கி ணைத்தார். 100க்கும் அதிகமான மாணவ,மாணவியர்கள் இந்த பேச்சுப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பெரியாரு டைய நூல்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment