அயோத்தி ராமன் கோயில் விவகாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

அயோத்தி ராமன் கோயில் விவகாரம்

தாழ்த்தப்பட்டோர் அளித்த நன்கொடைகள் தூய்மை அற்றதாம்!
திருப்பி அளிக்கப்பட்ட கொடுமை!

அயோத்தி, ஜன.25- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி யில் ராமன் கோயிலின் திறப்பு விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர் களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது.
இதையடுத்து காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாடி உள் ளிட்ட கட்சிகள் “ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட் டோம்” என அறிவித்துவிட்டன.
இதற்கிடையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர் சித்த உத்தரகண்ட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ் வரனந்த் சரஸ்வதி, “சங்கராச்சாரியார் கள் யாரும் ராமன் கோவில் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம்” என அறிவித் தார்.
இப்படி தொடர் சர்ச்சை யில் சிக்கி வரும் ராமன் கோவில் திறப்பு விழா தற்போது மற்றொரு சர்ச் சையில் சிக்கியுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் நன் கொடையில் தயாராகும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும் எனக் கூறி ராமன் கோவிலுக்கு தாழ்த் தப்பட்ட மக்களிடம் நன் கொடையாக பெறப்பட்ட நிதி திருப்பி அளிக்கப்பட்ட தால் சர்ச்சை எழுந்துள்ளது.
ராமன் கோவில் விழாவுக் காக நாடு முழுவதும் பல் வேறு இடங்களில் நிதி வசூலிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் ராஜஸ் தான் மாநிலம் ஜாலவார் மாவட்டத் திலும் பல்வேறு தரப்பு மக்களிடம் அரசு அதிகாரிகள் நிதி வசூல் செய்துள்ளனர்.
அதில் முண்ட்லா கிரா மத்தில் உள்ள ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்களிடமும் நன்கொடை வசூ லிக்கப்பட் டுள்ளது.
ஆனால், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அன்று, அந்த கிராமத்துக்கு வந்த சில அதிகாரிகள் அந்த மக்கள் அளித்த நிதியை திரும்ப அவர்களிடமே திரும்பி கொடுத்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பிய போது, கோயில் சடங்கு களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் பணம் ஏற்கப் படாது என்றும், அவர்கள் நன்கொடையில் அளிக்கும் பிரசாதம் தூய்மையற்ற தாகக் கருதப்படும் என்பதால் அவர்கள் அளித்த நிதியை திரும்ப அளிப்பதாக கூறியுள் ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சில ஒடுக்கப்பட்டோர் அமைப்பு களுடன் இணைந்து, இந்த நிகழ்வு குறித்து காவல் துறையில் புகார் அளித் துள்ளனர்.
ஆனால் புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள் கிராமத் திற்கு வந்து புகாரை கை விடுமாறு கிராம மக்களை மிரட்டி வருவதாக ஊடகங் களிடம் கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

No comments:

Post a Comment