"போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

"போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து"

featured image

“போலிச் செய்திகளால்
இந்தியாவுக்கு ஆபத்து”
எச்சரிக்கும் உலக பொருளாதார மன்றம்

வாசிங்டன்,,ஜன. 30- உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490 வல்லுநர்களிடம் ஒரு ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில் அந்த வல்லுநர்களின் கருத்துப்படி, 2024ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்கவேண்டியவை என 34 ஆபத்துகளை உலக பொருளாதார மன்றம் பட்டியி லிட்டது. அவற்றுள், போலிச் செய்திகளும் ஒன்று.
அந்த 34 ஆபத்துகளில் போலிச் செய்திகள் எந்த நாட்டிற்கு அதிக ஆபத்தை உருவாக்கும் எனும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment