வேகமாக முன்னேறும் திருச்சி பஞ்சப்பூரில் வருகிறது அய்.டி. டைடல் பார்க்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

வேகமாக முன்னேறும் திருச்சி பஞ்சப்பூரில் வருகிறது அய்.டி. டைடல் பார்க்!

featured image

திருச்சி, ஜன27- திருச்சி மாந கராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த டைடல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் அய்டி பார்க் அமைக் கப்படும் என்று தமிழ் நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வரு கின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மதுரை உள்ளிட்ட தமிழ் நாட்டில் உள்ள அய்டி பூங்காக் களில் புதிய நிறுவனங்கள் செயல் பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் நாட்டில் ஓசூர், கோவை, சென்னை உள் ளிட்ட 10 இடங்களில் அய்டி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல் படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் பூங்கா: சமீபத்தில் தான் தஞ்சையில், 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து முதல் தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. மேலும் திட்டத்தின்படி பணி கள் முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஹை ரைஸ்: இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. அய்டி பார்க்க தொடங்க வசதியாக மின்சார சலுகை கள், பல மாடி கட்டடம் கட்ட வசதியாக எப்எஸ்அய் சலுகைகள் உள் ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங் கப்பட உள்ளன. தஞ்சையிலும் இந்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
திருச்சி பூங்கா: இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இந்த டைடல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். விரை வில் இதற்கான கட்டுமானம் தொடங் கப்பட உள்ளது.
முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்ப ரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ணிலிசிளிஜி) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத் திடம் அய்டி மற்றும் அய்டி அலுவலகம் கட்டு வதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.
ஒதுக்கீடு: இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப் பட்டு, பெரிய அலுவலக இடத் துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.
திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-2024 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக் கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக் குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத் தில் மாநக ராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட் டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது. இங்கே கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள் ளன.
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப் பிட்டாலாண்ட் (சிணீஜீவீtணீறீணீஸீபீ) குழுமம் 50,000 தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள பன்னாட்டு தொழில்நுட்ப பூங் காவை (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ஜிமீநீலீ றிணீக்ஷீளீ) அமைத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பூங்காவை திறந்து வைத்தார். ஆட்டோ மொபைல் துறையில் முதன்மை யாக இருக்கும் தமிழ்நாடு தற் போது அய்டி துறையிலும் பாய்ச் சலை நிகழ்த்த தொடங்கி உள்ளது.

No comments:

Post a Comment