பட்டால்தான் புத்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

பட்டால்தான் புத்தி!

கேரளாவில் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர்

திருவனந்தபுரம்,நவ.30- கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசு அனுப்பி உள்ள மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத் திருக்க ஆளுநர்களுக்கு சுதந்திரம் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்தது. கேரள அரசின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இதனை குறிப்பிடும்படியும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த சூழலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக திருத்த மசோதா உள் ளிட்ட 7 மசோதாக்களை, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி உள் ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment