மாலத்தீவு கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கைகோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

மாலத்தீவு கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கைகோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.7 மாலத் தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழ் நாடு மீனவர்கள், அவர் களின் படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகையையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள் ளார்.

 இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கு முதல மைச்சர் நேற்று (6.11.2023) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள், 'ஹோலி ஸ்பிரிட்' என்ற படகில் கடந்த அக்.22-ஆம் தேதி மீன்பிடிக்க சென்றபோது, மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள னர். மாலத் தீவு கடலோ ரக் காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன் பிடி படகின் ஓட்டுநருக்கு, கடந்த நவ.1-ஆம் தேதி, மாலத்தீவு குடியரசின் மீன்வளம், கடல் வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.25 கோடி அபராதம் விதித் துள்ளது. அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக் குள் மேற்படி அபராதத் தொகையை செலுத்த வேண்டும். அதுவரை, அந்த மீன்பிடி படகு மாலத்தீவு காவல் படையினரின் வசம் இருக்கும் என்றும் மாலத் தீவு அதி காரிகள் குறிப்பிட்டுள் ளனர். 

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களும், அவர்களது குடும்பத்தின ரும், மீன்பிடித் தொழிலை மட்டுமே தங்களது வாழ் வாதாரமாக கொண்டுள் ளனர். தற்போது விதிக்கப் பட்டிருக்கும் இந்த அபராதத் தொகை மிக அதிகமானது. அவர் களது சக்திக்கு அப்பாற் பட்டது. இது அவர் களையும், குடும்பத்தின ரையும் நிரந்தரமாக வறுமையில் தள்ளிவிடும் 

மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் நாடு மீனவர்கள் சார்பில், தாங்கள் உடனடியாக தலையிட்டு, படகுக்கு விதிக்கப்பட்ட அபரா தத்தை ரத்து செய்வதுடன், மீனவர்கள் மற்றும் அவர் களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தாங்கள் தக்க நேரத்தில் தலையிட்டு மேற்கொள்ளும் நடவ டிக்கை, கடினமான சூழ் நிலையை எதிர்கொண் டுள்ள தமிழ்நாடு மீனவர் களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும் என நம்புகிறேன். 

இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித் துள்ளார்.


No comments:

Post a Comment