சோலையார்பேட்டையில் "சுயமரியாதைச் சுடரொளி" ஜெகதாம்பாள் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

சோலையார்பேட்டையில் "சுயமரியாதைச் சுடரொளி" ஜெகதாம்பாள் படத்திறப்பு

திருப்பத்தூர், நவ. 30- திருப்பத்தூர் மாவட்ட கழக காப்பாளர் இரா.நரசிம்மனின் வாழ்வி ணையர்  சுயமரியாதைச் சுட ரொளி ஜெகதாம்பாள்  அவர்களின் படத்திறப்பு - நினை வேந்தல் நிகழ்வு, திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் தலைமையில் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சோலையார் பேட்டை ஆர்.எஸ்.மஹாலில் நடைபெற்றது.

இந்நினைவேந்தலுக்கு வேலூர் மாநகர தலைவர் ந. சந் திரசேகரன் மற்றும் ஜெகதாம் பாள் அவர்களின் புதல்வர் வரவேற்பு நல்கினார்.

தலைமை கழக அமைப்பா ளர் கோ.திராவிட மணி, மாநில மகளிரணி பொருளா ளர் எ.அகிலா, மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், மாவட்ட ப.க. தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாவட்ட துணை தலைவர் தங்க அசோ கன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.ஏ.சிற்றர சன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், மாவட்ட ப.க. செயலாளர் வே.அன்பு, துணை செயலாளர் பெ.பெரி யார் தாசன், மாவட்ட துணை தலைவர்  ஆம்பூர் பன்னீர் செல்வம், சோலையார் பேட்டை நகர தலைவர் 

கே.ராஜேந்திரன், காளிதாஸ் (நகர தலைவர் திருப்பத்தூர்), ரவி (நகர செயலாளர் ஆம்பூர்), விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), நா.சுப்புலட்சுமி (மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர்), கோ.திருப்பதி (மாவட்ட ஆசி ரியரணி தலைவர்), தா.பாண் டியன் (ஒன்றிய தலை வர்), 

க. மதியழகன் (நகர செய லாளர் சோலையார்பேட்டை), சிவக்குமார் (நகர அமைப்பா ளர் சோலையார்பேட்டை), அன்புச் சேரன் (நகர அமைப் பாளர்  வாணியம்பாடி), 

ரா. நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்) ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

சுயமரியாதை சுடரொளி ஜெகதாம்பாள் படத்தை மேனாள் அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து   நினைவேந்தல் உரையாற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு குணசேகரன்,  

கழக பேச் சாளர் பெரியார் செல்வம்,  மேனாள் ஒன்றிய குழு தலைவர் கே. சி. அழகிரி, விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.  அன்பழகன், பால குணசீலன் ஆகியோர்கள் நினை வேந்தல் உரையாற்றினார்கள்.

மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் இரா. நரசிம்மன் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment