ஒன்றிய அரசின் நடவடிக்கை எங்களுக்கு சோர்வை அளிக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 6, 2023

ஒன்றிய அரசின் நடவடிக்கை எங்களுக்கு சோர்வை அளிக்கிறது

ஊடகத்துறையினர் தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடில்லி அக் 6  நியூஸ்கிளிக் நிறுவனத்தில் டில்லி காவல்துறை சோதனை நடத்தி அதன் உரிமை யாளர் மற்றும் மனித வள மேம் பாட்டுத் துறைத் தலைவரை கைது செய்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங் கங்கள் கடிதம் எழுதியுள்ளன. இவ் விவகாரத்தில் தலைமை நீதிபதியின் தலையீட்டை அவை கோரியுள்ளன. 

டிஜிபப் நியூஸ் இந்தியா ஃப்வுண்டேஷன்(Digipub News India Foundation), இந்தியன் வுமன்ஸ் பிரஸ் கார்ப்ஸ் (Indian Women's Press Corps), பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா (Press Club of India) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கடிதத்தை எழுதியுள்ளன. அதில், நாடு முழுவதும் உள்ள பெரும் பான்மையான பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத் துடன் அழுத்தத்துடன் பணியாற்று கின்றனர் என்று சுட்டிக்காட்டி யுள்ளனர். அதனால் நீதித்துறை இதில் தலையிட்டு நாட்டில் அர சியல் சாசனம் இருக்கிறது அதற்கு அனைவருமே பதிலளிக்க உரியவர் கள்தான் என்பதை வலியுறுத்தி அதிகார அழுத்தத்தை எதிர் கொள்வது அவசியமாகியுள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அக்டோபர் 3 ஆம் தேதி நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்திலும் அதற்கு தொடர்புடைய 46 ஊழி யர்கள், நிபுணர்களின் வீடுகளில் நடந்த சோதனையை சுட்டிக்காட்டி யுள்ள ஊடக சங்கங்கள், "ஊடக வியலாளர்களை இதுபோன்ற கிரி மினல் நடவடிக்கைக்கு உட்படுத் துவது. அதுவும், அரசாங்கம் சில தேசிய, பன்னாட்டு நிகழ்வுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பாத பட்சத்தில் அதைச் செய் ததற்காக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்துவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற பழிவாங்கல் நடவடிக்கைகள் சுதந்திரத்துக்கு எதிரானது அல்லவா? ஊடகவிய லாளர்கள் சட்டத்துக்கு மீறிய வர்கள் என்று சொல்லவில்லை. நாங்கள் அப்படி இருக்கவும் விரும் பவில்லை. ஆனால் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுவது ஜனநாயகத் துக்கு எதிரானது எனக் கூறுகிறோம். ஊடகவியலாளர்களாக நாங்கள் சட்டத்துக்கு உட்பட்ட எல்லா விசாரணைகளுக்கும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், திட்டமிட்டு ஏவப்படும் விசா ரணைகள், சோதனைகள், பொருட் கள் பறிமுதல்கள் ஏற்பதற்கு இல்லை. 

இது ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என்று நம்மை நாம் விளம்பரப்படுத்திக் கொள்கிறோம். அப்படியிருக்க இத்தகைய செயல்கள் சரியானவை அல்ல" என்று தெரிவித்துள்ளன. வழிகாட்டுதல் தேவை: எதிர் காலத்திலும் இதுபோல் பத்திரிகை நிறுவனங்களில் சோதனை நடக் கும்பட்சத்தில் பத்திரிகையாளர் களின் அலைபேசிகள், மடிக்கணி னிகள் போன்ற உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கென சில வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். பத்திரிகையாளர் களிடம் விசாரணை மேற் கொள் வதிலும் வழிகாட்டுதல் தேவை என்று ஊடக சங்கங்கள் அக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன. நியூஸ்கிளிக் சோதனைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment