ஒரிசா பாலு மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

ஒரிசா பாலு மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்

கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக் குறைவால் தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (6.10.2023) மாலை தமது 60-ஆம் வயதில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். 

தமிழர் வரலாறு தொடர்பாக வும் கடல் கோளால் அழிந்து போன தமிழரின் பண்டைய நிலம் குறித்தும் தொடர்ச்சியான ஆய்வுகளை அறிவியல் முறைப்படி செய்வதைத் தம் கடமையாகக் கருதித் தொண்டாற் றியவர். வெறும் வாயில் பழம்பெருமை பேசு வதை விட, அதனை முறையாக ஆவணங்களுடன் பதிவு செய்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்கியவர். 

பெரியார் திடலுக்கும், குறிப்பாக பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்திற்கும் தொடர்ந்து வருகை தரக் கூடியவர். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நம்மால் பெரியார் விருது வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 

அவரது மறைவு இந்தத் துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஏராளமான ஆய்வாளர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டலும் வழங்கிய அவருக்கான சரியான மரியாதை - அவர் மேற்கொண்ட  ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மற்றவர்கள் தொடர்ந்து முன் னெடுப்பதே ஆகும். 

அவருக்கு நம் வீரவணக்கம். அவரது வாழ்விணையர், மகன், மகள், உறவினர் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,

தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment