செரிமானத்தை மீட்டெடுக்கும் ஓமத் தீநீர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

செரிமானத்தை மீட்டெடுக்கும் ஓமத் தீநீர்

செரிமானப் பிரச்சினையா? ஒரு சோடா குடித்துப் பெரு ஏப்பம் விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற கற்பிதம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது. இன்னும் சிலர் ஒவ்வோர் உணவுக் கவளத்துக்கும் இடையே ஒரு சோடா அல்லது குளிர்பானத்தைப் பருகும் தவறான உணவு முறையைப் பின்பற்றுகின்றனர். இப்படிப் பருகினால் செரிமானம் சிறப் பாக இருக்கும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு!

லேசான செரிமானக் கோளாறுகளுக்குக்கூட மாத்திரை அல்லது டானிக்கை மருத்துவரின் ஆலோசனையின்றி அடிக்கடி பயன்படுத்தும் கூட்டத்தையும் இங்கே குறிப்பிட் டாக வேண்டும். சில உணவு வகைகளைச் சாப்பிட்டால் சீரணக் கோளாறு ஏற்படும் என்று தெரிந்தும், சுவைக்கு அடிமையாகும் நவீனங்களைக் குக்கிராமங்கள்வரை பார்க்க முடிகிறது. செரிமானம் சார்ந்த பாதிப்புகள் பேசுபொருளாக மாறியிருக்கும் இப்போதைய சூழலில் அஞ்சறைப் பெட்டி யின் முக்கிய உறுப்பினரான ஓமத்திலிருந்து வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படும் மருந்தைப் பற்றி அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்!

அதி உணவு, காலம் தவறிய உணவு, குறை உணவு, முறையற்ற உணவு, சாப்பிட்டவுடன் படுத்து உறங்குவது, உணவை நன்றாக மென்று சாப்பிடாதது, அளவுக்கு மீறிய அசைவ உணவு, முறையற்ற டயட் வகைகள், துரித உணவுக் கலாச்சாரம் போன்ற பல காரணங்களால் செரிமானமின்மை, எதிர்க்களித்தல், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்று வலி, ஏப்பம், குமட்டல், வாயுப் பெருக்கம், மலக்கட்டு போன்ற செரிமான உபாதைகள் ஏற்படுவது இயற்கை.

செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட்டவுடன் உடனடியாக ‘ஆன்டாசிட்’ மருந்துகளைத் தேடி ஓடாமல், முதலில் உணவு முறையில் நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும். அடுத்தகட்டமாக, பாதிப்பை நிவர்த்தி செய்ய இயற்கையான பொருள்களின் ஆதரவை நாடலாம். அவ்வகையில் செரிமானத் தொந்தரவுகளைப் போக்க நம்மிடையே உள்ள புதையல்தான் சித்த மருந்தான ஓமத் தீநீர்!

ஓமத் தீநீர்: ஒவ்வொரு வீட்டிலும் முற்காலங்களில் ஓமத் தீநீர் புழக்கத்தில் இருந்தது. அதாவது ‘ஓம வாட்டர்’ அல்லது ‘ஓமத் திராவகம்’ என்று சொன்னால் பலருக்கும் நினைவுக்கு வரலாம். அக்காலத்தில் என்றாவது நடைபெற்ற விருந்து நிகழ்வுகளிலோ, திருமண விழாக்களிலோ அதிகமாகச் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு களைச் சரிசெய்ய ஓமத் தீநீரை நாடும் பழக்கம் பெரும்பாலான மக்களிடம் இருந்தது. இன்று பெருகிவிட்ட விருந்து கலாச்சார உலகில் ஓமத் தீநீரின் பயன்பாடு அளவிட முடியாத விகிதத்தில் இருந் திருக்க வேண்டும். ஆனால், ஓமத் தீநீர் என்பதையே அறியாத நபர்களே இன்று அதிகம்.

தீநீர் காரம் மிக்கதாக இருக்கும். காரத்தன்மையை மய்யப்படுத்தியே தீநீர் என்கிற மருந்துப் பெயர் உருவாகி இருக்கலாம். பதினைந்து மி.லி. அளவு தீநீரைத் தண்ணீரில் கலந்து பருகுவதே முறை. ஓமத் தீநீர் தயாரிப்பின்போது மேலே படிந்திருக்கும் எண்ணெய்யும் ‘ஓம எண்ணெய்’ என்கிற பெயரில் சித்த மருத்துவத்தில் பயன்பாட்டில் இருக்கிறது.

No comments:

Post a Comment