நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, செப். 30- தமிழ்நாடு அரசால் 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்தச் சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழி ழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2021 - 2022ஆம் ஆண்டுக்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில், கலைமாமணி விருது பெற்றவர்களில், வயோ திக நிலையில், பொருளாதாரத் தில் நலிந்து, இன்னலில் வாழ்கின்ற கலைஞர்கள் பயன் பெறும் வகையில் ஆண்டுதோ றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக வழங்கப்படும் பொற்கிழித் தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்தி பத்து கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் படி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022-2023ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப் பட்ட வறிய நிலையில் உள்ள பத்து கலைமாமணி விருதாளர்க ளான கே.கல்யாணசுந்தரம், ச.சமுத்திரம், என்.பார்வதி உத யம், கே.குமரவேல், பா.முத்துசந் திரன், கோ.முத்துலட்சுமி, பி.ஆர்.துரை, ரா.கல்யாணசுந் தரம், எம்.எஸ்.முகமது மஸ்தான், டி.என்.வரலட்சுமி ஆகியோ ருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 லட்ச ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக் கான காசோலைகளை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நேற்று (29.9.2023) தலை மைச் செயலகத்தில் வழங்கினார்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில், நபர் ஒருவருக்கு 10,000 ரூபாய் மதிப்பீட்டில், இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்க 500 நாட் டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று 2021 - 2022ஆம் ஆண்டுக் கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, 2022 -2023ஆம் ஆண்டுக் கான தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவி கள் மற்றும் ஆடை, அணிகலன் கள் வாங்கிட தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 50 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அய்ந்து கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக் கான காசோலைகளை வழங் கினார்.

மேலும், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங் கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 15,063 கலைஞர்கள் பயனடைந் துள்ளனர். அதன் தொடர்ச்சி யாக, 2020 - 2021 மற்றும் 2021 - 2022ஆம் ஆண்டுகளுக்கான தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு 1.04.2023 முதல் மாதந்தோறும் 3,000 ரூபாய் வீதம் நிதயுதவி வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச் சர் நான்கு நலிவுற்ற மூத்த கலைஞர்களுக்கு மாதந்திர நிதி யுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக் டர் க.மணிவாசன் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment