பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி : திருச்சி சிவா வேதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி : திருச்சி சிவா வேதனை

சென்னை, ஆக.14 மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட் டத் தொடரில், மணிப்பூர் பிரச்சினை குறித்து பேசியதால் குழப்பம் நிலவியது. இரு அவைகளிலும் மாநில அதிகாரங்களின் உரிமைகளில் தலையிடும் மசோ தாவை எதிர்த்த விவாதத்தில் திமுக பங் கேற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத் திலும் பங்கேற்றோம். மற்ற நாட்களில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசி னோம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, பல மசோதாக்களை குழப்பங் களுக்கிடையில் நிறைவேற்றினர். 

மணிப்பூரில் 100 நாட்களுக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது. நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டுள் ளனர். ஒரு லட்சம் பேர் நிவாரண முகாம்களிலும், காடுகளிலும் பதுங்கி வாழ்கின்றனர். 

இந்தப் பிரச்சினை முடிந்து விட்ட தாகக் கூறுகின்றனர். ஆனால், 230 பேர் காடுகளில், மியான்மர் எல்லையில் தவிக்கின்றனர். உள்ளூர் மக்கள் துணையுடன் காலம் தள்ளுகின்றனர். இரண்டு பெண்கள் ஆடைகளின்றி அழைத்து செல்லப்பட்டது குறித்து நாடாளுமன் றத்தில் எந்த விளக் கமும் தரவில்லை. "இந்தியா" கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையாக இணைந்துள்ளோம். 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அறிக்கை தரவேண்டும், குற்றச் சாட்டுக்களுக்குப் பதில் அளிக்க வேண் டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், பிரதமர் அவைக்கு வர மறுத்தார். உள்துறை அமைச்சர் வருவார் என்றனர். இதை நாங்கள் ஏற்கவில்லை. மணிப்பூர் குறித்து பிரதமர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஒரே நாளில் ஒரு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் நிறைவேறியதாக சரித்திரம் இதுவரை இல்லை. 42 சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குற்றங் களுக்கு தண்டனை குறைக் கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை அதிகா ரிகள், மற்றொருவருக்கு வந்த பார் சலைப் பிரிப்பது தவறில்லை என்று கூறியுள்ளார்கள்.

நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற வேண்டும். ஆனால், அதை நீர்த்துப் போகச் செய்தனர். எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டினர். மணிப்பூரில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, திமுகவை குறிவைக்கின்றனர். மணிப்பூர் மக்க ளுக்கு, பொறுப் புள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கின்றன. ஆனால், ஆளும் கட்சியோ, பிரதமரோ பொறுப் புடன் பதில் அளிக்க வில்லை. டில்லி மாநில மசோதா மூலம், அங்குள்ள முதலமைச் சருக்கு அதிகாரிகள் கட்டுப்பட மாட்டார்கள் என்று சட்டம் இயற்றிவிட் டனர். 

நியமிக்கப்பட்டவர், தேர்வு செய்யப் பட்டவரைத் தாண்டும் அதிகாரம் உள்ளது. எங்களுக்கு நாடாளுமன் றத்தை முடக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேனாள் முதலமைச்சர் ஜெயலலி தாவுக்கு நடந்த விடயத்தைப் பொறுத்தவரை, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நடந்தது எதுவுமே தெரியாது. அவர் நேரடி யாக எதையுமே பார்க்கவில்லை. அன்று ஜெயலலிதா அருகில் இருந்த மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனிடம் கேட் டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நிர்மலா சீதாராமன் அரசிய லுக்காகப் பேசுகிறார். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.

No comments:

Post a Comment