இந்தியாவிலேயே முதல் முதலாக பெண் சிறைக் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் நிலையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

இந்தியாவிலேயே முதல் முதலாக பெண் சிறைக் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் நிலையம்

சட்டத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

திருவள்ளூர், ஆக.11   புழல் பெண்கள் தனிச் சிறை அருகே, இந்தியா விலேயே பெண் சிறை வாசிகளால் நிர்வகிக்கப் படும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையத்தை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். சென்னை, புழல் பெண்கள் தனி சிறையை சேர்ந்த 30 பெண் சிறைவாசிகள் நிர்வகிக் கும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், புழல், அம்பத்தூர் சாலையில், புழல் பெண் கள் தனி சிறை அருகே ஃப்ரீடம்(Freedom) பெட் ரோல் விற்பனை நிலையம், 1,170 ச.மீ. பரப்பளவில் ரூ.1.92 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப் பட்டது. 

இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகளால் நிர்வகிக்கப்படும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையத்தை பெட்ரோல், டீசல் மற்றும் எக்ஸ்பி 95 உள்ளிட்ட விநியோக பிரிவுகளை கொண்டு, 20 கேஎல் பெட்ரோல், 20 கேஎல் எக்ஸ்பி 95 மற்றும் 40 கேஎல் டீசல் கொள் ளளவு கொண்டதாக அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதை யடுத்து, இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை நேற்று சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர் திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறிய தாவது: புழல் பெண்கள் தனிச் சிறை அருகே அமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் பெட்ரோல் விற்பனை நிலையம், இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகளால் நடத்தப் படும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையம். இங்கு பணிபுரியும் பெண் சிறை வாசிகள் தற்போது மாதம் ரூ. 6 ஆயிரம் தங்கள் குடும்பத்துக்கு அனுப்பக் கூடிய வாய்ப்பை பெற் றுள் ளனர். விரைவில் அவர்கள் ரூ. 10 ஆயிரத்தை தங்கள் குடும்பத்துக்கு அனுப்பக்கூடிய வாய்ப்பு உருவாக்கி தரப்பட உள் ளது என்றார். 


No comments:

Post a Comment