மணிப்பூர்: வன்கொடுமையை கண்டித்து கடத்தூரில் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

மணிப்பூர்: வன்கொடுமையை கண்டித்து கடத்தூரில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை29- மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்கொடுமையைக் கண்டித்து தர்மபுரி மாவட்டம்  கடத்தூரில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கழக காப்பாளர்  தமிழ்ச்செல்வன், ஒன்றிய கழகத் தலைவர் பெ.சிவலிங்கம், நகரத் தலைவர் நெடுமிடல் மற்றும் மாணவர் கழக பொறுப்பாளர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் கழக தலைவர் இ.சமரசம் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்( மார்க்சிஸ்ட்), இஸ்லாமிய அமைப்புகள், பவுத்த நலச்சங்கம், விடுதலை வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.


No comments:

Post a Comment