கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை,ஜூன்30 - தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு, பணி செய்ய இயலாத கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயி ரம் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தொழிலாளர் நலத் துறைச் செயலர் முகமது நசிமுதீன் வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது: 

சட்டப்பேரவையில் தொழிலா ளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணே சன், ‘‘தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களின் வாழ்வா தாரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்க ளால் பாதிக்கப்பட்டு, பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர் களுக்கு தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம், முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப் படும்.

இந்த நிதியுதவி 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுவிக்கப்படும். இந்தத் திட்டத்தினால் 1,500 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைவார்கள்’’ என்று அறிவித்தார். இந்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட் டுதல்கள் தற்போது வெளியிடப் பட்டுள்ளன.

அதன்படி, நிதியுதவி தேவைப் படும் தொழிலாளர்கள், கட்டு மானத் தொழிலாளர்கள் நல வாரி யத்தின் பதிவு அட்டையை இணைத்து, தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், சிவில் சர்ஜன் நிலைக்கு மேற்பட்ட அரசு மருத்துவரிடம் இருந்து மருத்துவச் சான்றிதழ் பெற்றி ருப்பதுடன், தீவிர நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதற்கான மருத் துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களது விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வீதம் செலுத்தப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment