இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிப்பு அய்.நா. வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிப்பு அய்.நா. வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

வாசிங்டன்,மே 4 - வரும் மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக அய்.நா. அறிவித்துள்ளது. எல்-நினோ நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என அய்.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை மாத இறுதியிலேயே எல்-நினோ உருவாக 60விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகவும், ஜூலை தவறினால் செப்டம்பர் இறுதியில் எல்-நினோ உருவாக 80விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகவும் அய்.நா. வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.


No comments:

Post a Comment