புதிய நாடாளுமன்ற‌ கட்டட சர்ச்சை பிரதமர் மோடி பதிலளிக்க கார்கே வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 26, 2023

புதிய நாடாளுமன்ற‌ கட்டட சர்ச்சை பிரதமர் மோடி பதிலளிக்க கார்கே வலியுறுத்தல்

பெங்களூரு,மே26- புதிய நாடாளுமன்றக் கட்ட டத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பாஜகவி னர் அவமதித்துவிட்ட தாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கி ரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருநாடகாவில் உள்ள குல்பர்காவில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: “பாஜகவினர் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின வகுப் பினரை பெயரளவுக்கு மட்டுமே மதிக்கிறது. அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக ஓரிரு வருக்கு பொறுப்புகளை வழங்கப் படுகிறது. 

ஆனால் மதிக்க வேண்டிய இடத்தில் அவர்களை அவமதிப் பதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத் தின் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு அழைக்கப்பட வில்லை.

அவரை அழைக்கா தது ஏன் என பிரதமர் நரேந்திர மோடி பதில ளிக்க வேண்டும். கட்டப் பட்டுள்ள இந்த நாடாளு மன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப் போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தையும் பாஜக அழைக்க வில்லை. இதன்மூலம் பட்டியலின, பழங்குடியின வகுப்பினரை பாஜக புறக்கணித்துள்ளது.

சமூக நீதி கடைப் பிடிக்கப்படும்: கருநாடக அமைச்சரவையில் சமூக நீதியின் அடிப்படையில் அனைத்து வகுப்பினருக் கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். சிறு ஜாதி களுக்கும் அமைச்சரவை யி ல் இடமளிக்கப்படும். மிகவும் பின்தங்கியுள்ள கல்யாண கருநாடக பகு தியை சேர்ந்த 3 அல்லது 4 பேருக்கு அமைச்சரவை யில் இடமளிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment