முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டம், முள்ளிகரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்

திருச்சி, மே 2 திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நேற்று  கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு பேசு கையில்,

கிராம சபைக் கூட்டத் தின் முக்கிய நோக்கமே கிராமத்தில் உள்ள வேலை களின் முன்னேற்றத்தை யும், அடுத்த ஆண்டிற்காக திட்டமிட்டுள்ள வேலை களின் விபரங்களையும் நாம் அறிந்து கொள்வதற் காக நடத்தப்படுகிறது. ஓவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் முக்கிய மான பொருட்கள் விவாதிக்கப் படும். அதன் அடிப்படை யில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செல வினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், சுத்த மான குடிநீர் விநியோகத் தை உறுதிசெய்தல் தொடர் பாகவும், கிராம வளர்ச்சி திட்டம்  குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள் விவரம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பிரதம மந்திரி யின் ஊரக குடியிருப்பு திட்டத்தின்கீழ் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், இறுதி செய்யப்பட்ட தகுதியான குடும்பங்களின் கணக்கெடுப்பு பட்டி யல்கள் குறித்தும், பிரதம மந்திரி கிராம சாலைகள் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக் கைகள் குறித்தும், நெகிழிக்கு மாற்றுப் பொருட்கள் பயன் படுத்துதலை ஊக்குவித்தல் தொடர்பாகவும், நெகிழி கழிவுமேலாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும், ஜல்ஜுவன் திட்டத்தின் மூலம்மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் குறித்தும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கத்தின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள்குறித்தும், வறுமை குறைப்பு திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக் கப்பட்டது. இத்திட்டங் களின் மூலம் உங்கள் ஊருக்குத் தேவையான பொதுவான முக்கியத் துவம் வாய்ந்த திட்டங்கள் குறித்து, ஊர்ப் பொது மக்கள் தெரிவிக்கும்பட் சத்தில் வரும் நிதியாண்டில் அத்திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும். எனத் தெரிவித்தார்.

திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலை யை தக்கவைக்க அறி வுறுத்தப்பட்டது. மேலும் கழிப்பறையை கட்டி பயன் படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் செயல் படும் கல்வி வழிகாட்டு குழு மற்றும் சமுதாய பங்களிப்பின் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி மேலாண் மை குழுவின் மூலம் பள்ளி வளர்ச்சி, கற்றல்-கற்பித்தல், பள்ளி உட்கட்ட மைப்பு, மாணவர் பாது காப்பு, பள்ளி இடைநிற்றல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து பொதுமக்களி டையே விவாதிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ், தனிநபர் வேலைக் கான அட்டைகளை மாவட்ட ஆட்சியர்  தேர்வுசெய்யப் பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக எங்கள் கிராம் எழில்மிகு கிராமம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாண வர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு, குழந்தைகளை அரசுப் பள்ளியில்சேர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கியும், திருச்சிமாவட்டத்தில் அனைத்து ஊராட்சி களி லும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தினை தொடங்கி வைக்கும் வகை யில், முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ரமேஷ் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) கங்காதாரணி, அந்த நல்லூர் ஒன்றிய குழு தலை வர் துரைராஜ், முள்ளிக் கரும்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் கீதா துரைராஜ், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment