கோவில்களில் "பிரசாதமாக" கஞ்சாவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

கோவில்களில் "பிரசாதமாக" கஞ்சாவா?

புவனேஸ்வர், மே 24 ஒடிசாவின் அனைத்து 30 மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி, மாநிலத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் கஞ்சா பயன் பாட்டை தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இத னால், புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

ஆன்மிக குரு மற்றும் சமூக சீர்திருத்தவாதியான பத்மசிறீ விருது பெற்ற பாபா பாலியா வேண்டுகோளின் அடிப்படையில் இந்த தடைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. எண்ணற்ற எதிர்மறையான சுகாதாரத் தீங்கு களை ஏற்பட செய்பவை அவை என அவர் கூறியுள்ளார். அவரது, இந்த கடிதம் பற்றிய விவரம் தற்போது வெளியானது.

ஒடிசாவில் உள்ள சில சிவன் கோவில்களில் பிரசாதம் என வழங்கப்படும் இந்த கஞ்சா, அந்த பகுதியில் நீண்டகாலத்திற்கு மதம் சார்ந்த முக்கியத்துவத்துடன் தொடர்பு பெற்று உள்ளது. பக் தர்களால் கஞ்சா பிரசாதம் என உட்கொள்ளப்படுகிறது.

இதுபற்றி ஒடியா மொழி, இலக் கியம் மற்றும் கலாசாரத்திற்கான துறையின் அமைச்சர் அஸ்வினி பத்ரா, அரசின் இந்த முடிவை நியாயப்படுத்தி உள்ளார். சிவன் கோவில்கள் மட்டுமின்றி, கோவில் வளாகத்திற்குள் எந்தவித போதை பொருள் பயன்பாடு பற்றியும் பரிசோதனை செய்து, தடை செய்ய வேண்டிய தேவை உள்ளது என கூறியுள்ளார். ஆனால், 11-ஆம் நூற் றாண்டை சேர்ந்த லிங்கராஜ் கோவி லின் ஊழியர்கள் கூறும்போது, கோவிலில் கடவுளுக்கு கஞ்சா படைக்கப்படுவதில்லை என கூறு கின்றனர். மற்றொரு அகண்டல மணி கோவிலின் தலைமை பூசாரி யான விஜய் குமார் தாஸ் கூறும் போது, 'கடவுள் சிவனுக்கான' சடங்கின் போது, பிரசாதத்தில் கஞ்சா பயன் படுத்தப்படும் என்றும் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டு விடும் என்றும் கூறி உள்ளார். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. அரசின் தடை பற்றி என்ன செய்யலாம்? என ஆலோசனை மேற் கொள் வோம் என அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment