இந்தியாவில் கரோனா பாதிப்பு சரிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

இந்தியாவில் கரோனா பாதிப்பு சரிவு

புதுடில்லி, மே 2- இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது குறையத்தொடங்கியுள்ளது. 

இந்தியாவில் நேற்று, 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,325- ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு நாட்டில் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு என்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,379- பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 44,175 ஆக குறைந்துள்ளது.

No comments:

Post a Comment