‘தினமலர்’ மே 3 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் கருநாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் வேதிக்கழிவுகளை ஆற்றில் திறந்துவிடுவதால் ஆற்று நீர் கெட்டவாடை வீசுவதோடு நுரைபொங்கி வருவதாக எழுதியுள்ளது.,
அதே தினமலரில் (7.5.2023) நேற்று முன்தினம் முதல் பக்கத்தில் இரு ஆண்டு சாதனைகளில் இதுவும் ஒன்றும் என்று கூறி திமுக ஆட்சியை குறை கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசின் சூழியல் பாதுகாப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசும், பல்வேறு சூழியல் அமைப்புகளும் விருதுகள் கொடுத்து பாராட்டியுள்ளன. நேரம் இருக்கும் போது “தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் இணையதளம்” சென்று பார்க்கவும். 4ஆண்டுகளாக குறுக்கு வழியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, ஆண்டுக்கு ஒரு முதலமைச்சர் என்று மியூசிகல் சேர் விளையாட்டோடு, யார் அதிகம் கமிசன் வாங்குவார்கள் என்ற போட்டியும் அங்கு நடந்தது, 40 சதவீத கமிசன் என்பது காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு அல்ல, பாஜக பிரமுகரும், தற்கொலை செய்துகொண்ட அரசு ஒப்பந்ததாரரும் சாகும் முன்பு வீடியோவில் கூறியது.
தமிழ்நாடு அரசை குற்றம் சொல்ல ஒன்றுமே இல்லாத நிலையில், கருநாடகாவின் கயமைத்தனத்தால் விளைந்த ஆற்றுநீர் சீர்கேட்டை “இரண்டு ஆண்டு சாதனைகளில் இதுவும் ஒன்று” என்று கூறி தனது ஆதங்கத்தைக் கொட்டி வைத்துள்ளது.
No comments:
Post a Comment