மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 26, 2023

மறைவு

திராவிடர் கழக விருத் தாசலம்  நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73) உடல்நலக்குறைவால் நேற்று (25.5.2023) இரவு 10 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

நா.சுப்பிரமணியன் சுகாதார மேற்பார்வையாள ராகப் பணியாற்றிய போது, பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பு வகித்து இயக்கப் பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் விருத்தாசலம் நகர கழகத் தலைவராக செயல்பட்டு வந்தார். 

மறைவுற்ற நா.சுப்பிரமணியனுக்கு இணையர் : தேவகி, மகன்: கார்ல்மார்க்ஸ், மகள்கள்: கயல்விழி, கனிமொழி உள்ளனர். மறைவுற்ற சுப்பிரமணியன் உடலுக்கு  கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தி, அவர்தம் குடும் பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித் தனர். இன்று மாலை (26.05.2023) 4 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.

No comments:

Post a Comment