இணைய வழியில் வழக்கு தொடரலாம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

இணைய வழியில் வழக்கு தொடரலாம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்

புதுடில்லி மே 13- இணைய வழியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதியை தலைமை நீதிபதி 

டி.ஒய்.சந்திரசூட் நேற்று (12.5.2023) தொடங்கி வைத்தார். 

இந்த வசதி 24 மணி நேரம் கிடைக்கும் என அவர் கூறினார். நாடு முழுவதும் இணைய வழி நீதிமன்றங்களும் இணைய வழியில் வழக்கு தொடரும் வசதியும் ஏற் படுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தில் இணைய வழியில் வழக்கு தொடரும் மேம்படுத்தப்பட்ட வசதியை (இ-ஃபைலிங் 2.0)அவர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து நீதிமன்ற அறையில் நேற்று விசாரணை தொடங்குவ தற்கு முன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது: 

இ-ஃபைலிங் 2.0 வசதியை தொடங் கியுள்ளோம். இந்த வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். இணைய வசதிகள்இல்லாத மற்றும் தொழில் நுட்பம்பற்றி அறியாத வழக்குரை ஞர்களுக்கு உதவிட இரண்டு சேவை மய்யங்கள் தொடங்கப் பட்டுள்ளன. அனைத்து வழக்கு ரைஞர்களும் புதிய வசதியை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். 

இ-சேவை மய்யங்கள் மூலம் ஒருவர் வழக்கு தொடர்வது மட்டுமின்றி பிற சேவைகளையும் பெறலாம். இ--ஃபைலிங் மென் பொருள் மூலம் நாட்டின் எந்த வொரு நீதிமன்றம் அல்லது தீர்ப் பாயத்தில் உள்ள வழக்கின் நிலையையும் அறியலாம். 

இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.


No comments:

Post a Comment