அஞ்சல் துறையில் 12,828 காலிப்பணியிடங்கள் - வேலைவாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

அஞ்சல் துறையில் 12,828 காலிப்பணியிடங்கள் - வேலைவாய்ப்பு

சென்னை,மே30 -  அஞ்சல் துறை யில் 12,828 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்களும் ஊதியமும்

கிளை போஸ்ட் மாஸ்டர்(BPM - Branch Postmaster BPM)  பதவிக்கு ரூ.12,000 முதல் 29,380 வரை ஊதி யமும், உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM / Dak Sevak)  பதவிகளுக்கு ரூ. 10,000 முதல் 24,470 வரை ஊதியமும் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டும் நிரப்பி அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி  11.6.2023. விண்ணப் பங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால், ஜூன் 12 முதல் 16 ஆம் தேதிக்குள் சரி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலை

இந்தப் பணிகளுக்கு விண்ணப் பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். இதில் ஆங்கிலம், கணிதப் பாடங்களில் கண்டிப் பாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பதாரர் களுக்கு உள்ளூர் மொழி தெரிந் திருக்க வேண்டியது அவசியம். கூடுதலாக விண்ணப்ப தாரருக்கு மிதிவண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வய துக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், அரசு விதி களின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை 

இந்திய அஞ்சல் துறை இணையதளத்தில் கேட்கப்பட்டி ருக்கும் ஆவணங்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர் கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100அய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடை யாது.

மேலும் விவரங்களுக்கு இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்(<www.indiapost.gov.in>)  காணலாம்.


No comments:

Post a Comment